நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை

கொழும்பு:

இலங்கை குறுகிய வேலை வார வேலை நாட்களை அறிவித்துள்ளது. வரும் புதன்கிழமை 18ஆம் தேதி அது நடப்புக்கு வரும். 

அரசுத் துறைக்கு இது பொருந்தும். தனியார் துறையும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது. 

அதன்படி இலங்கையில் இனி ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை. 

மருத்துவமனைகள், துறைமுகங்கள், அவசரச் சேவைகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. அவை வழக்கம்போல் இயங்கும். 

அரசாங்கம் அனைத்துப் பொது விழாக்களையும் நிறுத்தி வைத்துள்ளது. 

முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்களை அது கேட்டுக்கொண்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் கட்டுப்பாடு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு வாகன ஓட்டுநனருக்கும் வாரத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது.

நாட்டின் பெட்ரோல், டீசல் இருப்பு கிட்டத்தட்ட ஆறு வாரம் மட்டுமே நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset