செய்திகள் உலகம்
சிங்கப்பூர், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 13 கடைகள் சிக்கின: அமலாக்கத்துறை நடவடிக்கை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 13 கடைகள் சட்டவிரோதமாக மது விற்றதாகச் சோதனை செய்யப்பட்டன.
இம்மாதம் 5ஆம் தேதிக்கும் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒரு கடை அதன் ஒரு பகுதியை மதுபானக் கூடமாகச் சட்டவிரோதமாக மாற்றியதாக அதிகாரிகள் அந்த சோதனையின்போது கண்டுபிடித்தனர்.
மேலும் 3 கடைகள் தகுந்த உரிமமின்றி கள்ளத்தன்மாக மது விற்றுள்ளது.
9 கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பால் மது விற்றதாக அதிகாரிகள் கூறினர்.
லிட்டில் இந்தியாவில் வாரநாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே மது விற்க அனுமதி உண்டு.
வாரயிறுதி நாள்களில் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே மது விற்கமுடியும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்போ அல்லது அதற்கு பிறகோ மது விற்கும் கடைகளுக்கு 10,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் மது விற்கும் கடைகளுக்கு 20,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு அபராதத்தோடு மூன்று மாதச் சிறைத்தண்ண்டனையும் விதிக்கப்படலாம்.
ஆதாரம்: 8World
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
