செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பேர் தங்களது வங்கிக் கணக்குகளை மோசடிக் கும்பல்களிடம் விற்றவர்கள் அல்லது வாடகைக்கு விட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும் 9 பேர் விசாரிக்கப்படுவதாக சிங்கப்பூர்க் காவல்துறை சொன்னது.
தீவு முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் சிக்கினர்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் (MAS) அதிகாரிகள் போல் நடித்து ஆடவர் ஒருவர் ஏமாற்றப்பட்டதாகக் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி புகார் கிடைத்தது.
ஆடவர் 1.1 மில்லியன் வெள்ளி வரை இழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடவர் மோசடிக் கும்பலுக்குப் பணத்தை மாற்றிவிடும்போது வங்கிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வங்கி அவரை இருமுறை தொடர்புகொண்டது.
ஆனால் வங்கி அழைத்தால் எப்படிப் பேசவேண்டும் என்று மோசடிக் கும்பல் அவருக்குப் பயிற்சி அளித்திருந்தது. தாம் முதலீட்டுக்காகப் பணத்தை மாற்றிவிட்டதாக ஆடவர் வங்கியிடம் கூறி சமாளித்திருக்கிறார்.
ஆனால் மீண்டும் பணத்தை மாற்றிவிட ஆடவர் முயற்சி செய்தபோது வங்கிக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
மோசடித் தடுப்பு நிலையத்திடம் வங்கி புகார் செய்தது. இதன்வழி மோசடிக் கும்பலின் செயல் அம்பலமானது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
