
செய்திகள் இந்தியா
குஜராத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டால் ஸ்மார்ட் போன் தரப்படும்: ராஜ்கோட் ஆணையர் அறிவிப்பு
ராஜ்கோட்:
ஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்து செய்திகள் வந்தவுடன் இந்தியாவில் மீண்டும் தடுப்பூசி போடுவதில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அக்கறை காட்டி வருகின்றன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்கள் தடுப்பூசி போடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. அதனால், இரண்டாவது தடுப்பூசி போடுபவர்களுக்கு ஸ்மார்ட் போன் தரப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு என்பதே அந்த அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.
ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
‘ராஜ்கோட் நகராட்சி சுகாதார மையங்களின் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த சுகாதார குழு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.’
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm