செய்திகள் இந்தியா
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி:
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்படுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வானொலியில் ஒலிபரப்பாகும் மனத்தின் குரல் - மன் கி பாத் - நிகழ்ச்சியில் பேசிய அவர்,
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வோர் மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைத்து வகையான கலாசாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இதுதொடர்பாக பாராட்டத்தக்கப் பணியைச் செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று, கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் தமிழ்ப் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
