செய்திகள் இந்தியா
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
ஹைதராபாத்:
இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் இன்று ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 89.
தமிழகத்தின் இளையாங்குடியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சித்தீக் இந்தியாவின் வேளாண்மைக் கழகத்திற்கு தலைவராக இருந்தவர்.
பாஸ்மதி அரிசி தங்களுடையது என்று அமெரிக்கா உரிமை கொண்டாடி காப்புரிமை கோரியபோது அதற்காக அறிவியல் அறிஞர் சித்தீக் அது இந்தியாவின் மரபார்ந்த அரிசி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தவர்.
இந்திய வேளாண்மைக் கழகத்திற்கு பல அரிய சேவைகளை செய்தவர்.
அவர் பணி ஓய்வு பெற்ற போது அவரது அரும்பணியைப் பார்த்து அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தில் நீங்கள் ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும் என்று அழைத்து ஹைதராபாத்தில் மிகப் பெரும் ஆய்வகத்தை அவருக்கு உருவாக்கித் தந்தார். சம்பளம் பெறாமல் ஆந்திர மாநிலத்திற்கு பல அரிய நெல் சாகுபடி முறைகளைக் கண்டறிந்து கொடுத்தார். அவர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டது உயர்தர ஆய்வுக்கூடம் மட்டுமே. எனக்கு ஓய்வூதியம் வருகிறது. அது போதும் என்று பெருந்தன்மையுடன் கூறியவர்.
அவரது மனைவி ஃபாத்திமுத்து சித்தீக் சிறந்த எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் பல எழுதி இருக்கிறார். நம்பிக்கை மாத இதழில் அவரது கதைகளும் பத்ம ஸ்ரீ சித்தீக் அவர்களின் நேர்காணலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
