செய்திகள் இந்தியா
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
டெல்லி,
டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு அணியில் பணியாற்றிய, நான்கு மாத கர்ப்பிணிப் பெண் கொமாண்டர் ஒருவர், தனது கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜனவரி 22 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 27 வயதான காஜல் என்பவரின் தலையில் அவரது கணவர் டம்பல்களைக் கொண்டு தாக்கியதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொலை, கணவர் தரப்பின் வரதட்சணை கோரிக்கையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இரவு, காஜலின் தம்பி நிகில், தனது மைத்துனரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறினார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கூர், “உன் அக்காவை இப்போது கொன்றுவிடுவேன், போலீசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் அழைத்தபோது காஜல் அலறிய குரல் கேட்டதாக கூறினார்.
அங்கூர் தொடர்ந்து, “அவள் இறந்துவிட்டாள், மருத்துவமனைக்கு வா” என கூறியதாக நிகில் தெரிவித்தார்.
டெல்லி போலீசார் கூறுகையில், இரவு 10 மணியளவில் ஏற்பட்ட சண்டையில் அங்கூர், காஜலின் தலையை கதவில் மோதச் செய்ததுடன், பின்னர் டம்பலைக் கொண்டு தாக்கியுள்ளார். தடயவியல் ஆய்வில், கதவு சட்டகத்திலும் அந்த டம்பலிலும் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அங்கூருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் காவல் துறையின் தற்காலிக காவலில் உள்ளார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
March 18, 2026, 2:43 pm
சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்திய அரசு எச்சரிக்கை
March 16, 2026, 1:02 pm
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026, 12:09 pm
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
March 15, 2026, 4:47 pm
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
