செய்திகள் உலகம்
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
ஹாங்காங்:
ஹாங்காங்கில் பிள்ளைகளுக்கு 14 வயதாகும்வரை திறன்பேசிகளைக் கொடுக்க வேண்டாம் என்கிறது Look Up Hong Kong அமைப்பு.
பிள்ளைகளுக்கு 16 வயதாகும்வரை அவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அது கூறியுள்ளது.
ஏற்கனவே 6 முதல் 10 வயது வரையுள்ள பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் திறன்பேசி வைத்திருப்பதாக அது நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் அதிக நேரம் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக SCMP செய்தி நிறுவனம் சொன்னது.
திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் உடல்ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 67 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பெற்றோரும் தாங்கள் திறன்பேசியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தச் சிரமப்படுவதாக ஆய்வு குறிப்பிட்டது.
தொடக்கநிலை அல்லது உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளையுடைய 651 பெற்றோர் ஆய்வில் கலந்துகொண்டனர். இதனை அரசு உத்தரவிட்டால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கோரினர்.
ஆதாரம்: Hong kong free post
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
