செய்திகள் உலகம்
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
பேங்காக்:
தாய்லாந்தில் தமது மனைவி வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டது தெரியாமல் பார்வையற்ற கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
மாண்டவர் 53 வயது தாய்லந்துப் பெண். அவரது கணவர் ஜெர்மானிய ஆடவர்.
மனைவி இரண்டு மாடி வீட்டுக்குள் தூக்குப் போட்டு மாண்டது தெரியவந்தது. கார் விபத்தொன்றில் முழுமையாகப் பார்வை இழந்த பெண்ணின் கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் அமர்ந்திருந்ததாக Bangkok Post கூறியது.
தம்பதியினர் அந்த வீட்டில் கடந்த ஓராண்டாக வாடகைக்கு இருக்கின்றனர். மாண்ட பெண் பேங்காக்கில் (Bangkok) டெக்சி ஓட்டுநராக வேலை செய்துவந்தார். அவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் கணவரைப் பார்த்துக்கொள்வார்.
சாலை விபத்தொன்று தொடர்பில் தமது மனைவியிடம் 40,000 பாத் (சுமார் 1,600 வெள்ளி) இழப்பீடு கேட்கப்பட்டதாகவும் அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என்றும் கணவர் கூறினார். இதனால் அண்மையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மனைவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கணவர் சொன்னார்.
ஆதாரம்: Bangkok Post
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
