
செய்திகள் உலகம்
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
பேங்காக்:
தாய்லாந்தில் தமது மனைவி வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டது தெரியாமல் பார்வையற்ற கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
மாண்டவர் 53 வயது தாய்லந்துப் பெண். அவரது கணவர் ஜெர்மானிய ஆடவர்.
மனைவி இரண்டு மாடி வீட்டுக்குள் தூக்குப் போட்டு மாண்டது தெரியவந்தது. கார் விபத்தொன்றில் முழுமையாகப் பார்வை இழந்த பெண்ணின் கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் அமர்ந்திருந்ததாக Bangkok Post கூறியது.
தம்பதியினர் அந்த வீட்டில் கடந்த ஓராண்டாக வாடகைக்கு இருக்கின்றனர். மாண்ட பெண் பேங்காக்கில் (Bangkok) டெக்சி ஓட்டுநராக வேலை செய்துவந்தார். அவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் கணவரைப் பார்த்துக்கொள்வார்.
சாலை விபத்தொன்று தொடர்பில் தமது மனைவியிடம் 40,000 பாத் (சுமார் 1,600 வெள்ளி) இழப்பீடு கேட்கப்பட்டதாகவும் அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என்றும் கணவர் கூறினார். இதனால் அண்மையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மனைவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கணவர் சொன்னார்.
ஆதாரம்: Bangkok Post
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm