
செய்திகள் வணிகம்
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
கோலாலம்பூர்:
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மைஇவெண்ட்ஸ் வர்த்தக மேம்பாட்டு பிரிவு இயக்குநர் டைலான் முஹம்மத் இதனை கூறினார்.
மைஇவெண்ட்ஸ், அப்சலூட் இவெண்ட்ஸ் ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பெருநாளை முன்னிட்டு இந்த மாபெரும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்து வருகின்றன.
பொதுமக்கள் கவர்ச்சிகரமான பெருநாள் பொருள்களையும் உபகரணங்களையும் வாங்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், கோலாலம்பூரில் வழக்கமாக இது நடைபெறும்.
தற்போது காயா ராயா விழா அடுத்த ஆண்டு லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
மேலும் புரூணை, பினாங்கிற்கும் அது விரிவுபடுத்தப்படுகிறது.
அதிக தேவை காரணமாக வெளிநாடுகளுக்கு விழாவை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
புரூணை காயா ராயா விழா வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை பிரைடெக்ஸ் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து பினாங்கு விழா வரும் 2026 மார்ச் 6 முதல் 8 வரை பினாங்கு அனைத்துலகமாநாட்டு மையத்தில் நடைபெறும்.
பின்னர் வரும் 2026 மார்ச் 13 முதல் 16 வரை கோலாலம்பூரின் மைடேக்கில் இவ்விழா நடைபெறும்.
இதன் உச்சக்கட்டமாக காயா ராயா விழா லண்டனில் உள்ள ஒயிட் சிட்டி கண்காட்சி மையத்தில் வரும் 2026ஆம் ஆண்டு மே 2 முதல் 3 வரை நடைபெறும்.
பண்டிகை கால பார்வையாளர்களை மையமாகக் கொண்ட காயா ராயா விழா போலல்லாமல்,
இந்த முயற்சி அனைத்துலக ஒத்துழைப்புகள், அனைத்துலக சந்தைகளில் நுழைவதற்கான நுழைவாயிலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am