நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை

டெஹ்ரான்:

எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத்  தாண்டியுள்ளது. 

மூன்றரை ஆண்டில் வரலாறு காணாத விலை உயர்வு அது. 

போர் தொடங்குவதற்குமுன் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்குச் சுமார் 67 டாலராக இருந்தது. 

WTI ரக எண்ணெய் 20 விழுக்காடு ஏற்றம் கண்டு 109 டாலரைத் தாண்டியது. 

அனைத்துலக எண்ணெய் விலையின் குறியீடாகக் கருதப்படும் Brent - 19 விழுக்காடு உயர்ந்து 110 டாலரைக் கடந்தது. 

போரினால் எண்ணெய் விலை ஏறும்நிலையில் பங்குவிலை இறங்குமுகமாக உள்ளது.

ஆசியப் பங்குச் சந்தை  இன்று ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய, ஜப்பானியப் பங்குச் சந்தைகளில் இன்று (9 மார்ச்) காலை ஆரம்பப் பரிவர்த்தனையில் படுவீழ்ச்சி. 

தென்கொரியாவின் Kospi குறியீடு 6.5 விழுக்காட்டுக்குமேல் சரிந்தது. 

நிதிப் பங்குகள் ஐந்து விழுக்காட்டுக்குமேல் சரியத்தொடங்கியதும் பரிவர்த்தனை ஐந்து நிமிடத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. 

ஜப்பானிலும் அதே கதை நீடித்தது. டோக்கியோவில் Nikkei குறியீடு 5.8 விழுக்காடு சரிந்தது. 

அனைத்துலக எண்ணெய் விலையின் குறியீடாகக் கருதப்படும் Brent - 19 விழுக்காடு உயர்ந்து 110 டாலரைக் கடந்தது. 

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது Truth Social தளத்தில் எண்ணெய் விலையேற்றம் பற்றிப் பதிவிட்டார். 

ஈரானின் அணுவாயுத மிரட்டலை அகற்றக் கொடுக்கவேண்டிய சிறிய விலை அது என்று அவர் சொன்னார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset