நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு

கோலாலம்பூர்: 

கடந்த ஆண்டு மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு மதிப்பு 426.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாகும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு அதிகரிப்பாகும். மொத்தம் 8,390 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 902 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதில் உள்நாட்டு முதலீடு 219.6 பில்லியன் ரிங்கிட் என பதிவு செய்யப்பட்டு, நாட்டின் மொத்த முதலீட்டில் 51.5 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடு 20.9 விழுக்காடு உயர்ந்து 207.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இந்த சாதனை, அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும் என்றும், முதலீடுகள் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப பரிமாற்றம், மக்களின் வளம் அதிகரிக்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், இந்த முதலீட்டு சாதனை உலக நாடுகள் மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மை, வளர்ச்சி திசையை நம்பிக்கையுடன் பார்க்கின்றன என்பதற்கான சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset