நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM

கோலாலம்பூர்: 

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா (BNM) இன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு  கூட்டத்தில் ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 2.75 சதவீதமாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான வலுவான முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உள்நாட்டு தேவையின் நிலைத்தன்மை, குறைந்து வரும் பணவீக்கம், வலுவான தொழில்நுட்ப முதலீடுகள், நிதி கொள்கை ஆதரவுகளால் முன்னேற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக BNM வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பிக்கப்பட்டுள்ளது.

“எனினும், சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்கள் உலக பொருளாதாரத்தில் அசாதாரண நிலையை அதிகரித்துள்ளன. அந்த மோதல்களின் கால அளவும் தீவிரமும் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைத் தீர்மானிக்கும்,” என்றும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களும் உலக நிதி சந்தைகளில் காணப்படும் அதிக அலைபாய்ச்சல்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக BNM தெரிவித்துள்ளது.

“மேலும், அதிகரிக்கக்கூடிய சுங்க வரிகள் தொடர்பான தொடர்ந்த கவலைகளும், நிதி சந்தைகளில் காணப்படும் உயர்ந்த மதிப்பீடுகளும் இன்னும் நிலவுகின்றன,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழில்நுட்ப செலவினங்கள் அதிகரிப்பது, பொருளாதார நடவடிக்கைகளில் சுங்க வரிகளின் தாக்கம் மிதமாக இருப்பது, முன்னேற்றமான நாடுகளில் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகள் போன்ற காரணிகளால் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset