செய்திகள் வணிகம்
வளைகுடாப்போர் எதிரொலி: ரமலான் பெருநாளுக்காக அனுப்பப்பட வேண்டிய ஆடைகள் விமான நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன
டாக்கா:
நோன்பு பெருநாளுக்காக அனுப்பப்பட வேண்டிய ஆடைகள் இந்தியா, பங்களாதேஷ் போன்ற தென்னாசிய நாடுகளின் விமான நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.
ஈரான் போரால் பல சரக்கு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்குச் சேவைகளை நம்பியிருக்கும் தென்னாசிய நாடுகள் தங்களின் சரக்குகளை அனுப்பமுடியாமல் தவிக்கின்றன. குறிப்பாக பெருநாள் காலங்களில் துணிகள் விற்பனை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகளில் விற்பனை அமோகமாக இருக்கும்.
மத்திய கிழக்கு வட்டாரத்தின் வழி அனுப்பப்படும் சரக்குகள்
இந்தியா - 41%
பங்களாதேஷ் - 50%க்கு மேல் தேங்கி உள்ளன.
Zara, H&M, Primark போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றில்தான் ஆடைகளை அதிகம் தயாரிக்கின்றன.
Primark நிறுவனத்தை நிர்வகிக்கும் Sparrow Group, வழக்கமாகப் பங்களாதேஷிலிருந்து லண்டனுக்குத் துபாய் வழி ஆடைகளை வரவழைக்கும்.
துபாய் விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் Sparrow Groupஇன் சரக்குகள் பங்களாதேஷ் விமான நிலையத்திலேயே கிடக்கின்றன.
சரக்குகளை வேறு வழியில் தருவிக்கமுடியுமா என்பதை அது பரிசீலிக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
March 3, 2026, 4:42 pm
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
March 2, 2026, 3:31 pm
மலேசிய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: ரிங்கிட் மதிப்பு கணிசமாக உயர்வு
February 27, 2026, 1:30 pm
