செய்திகள் வணிகம்
வளைகுடாப்போர் எதிரொலி: ரமலான் பெருநாளுக்காக அனுப்பப்பட வேண்டிய ஆடைகள் விமான நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன
டாக்கா:
நோன்பு பெருநாளுக்காக அனுப்பப்பட வேண்டிய ஆடைகள் இந்தியா, பங்களாதேஷ் போன்ற தென்னாசிய நாடுகளின் விமான நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.
ஈரான் போரால் பல சரக்கு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்குச் சேவைகளை நம்பியிருக்கும் தென்னாசிய நாடுகள் தங்களின் சரக்குகளை அனுப்பமுடியாமல் தவிக்கின்றன. குறிப்பாக பெருநாள் காலங்களில் துணிகள் விற்பனை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகளில் விற்பனை அமோகமாக இருக்கும்.
மத்திய கிழக்கு வட்டாரத்தின் வழி அனுப்பப்படும் சரக்குகள்
இந்தியா - 41%
பங்களாதேஷ் - 50%க்கு மேல் தேங்கி உள்ளன.
Zara, H&M, Primark போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றில்தான் ஆடைகளை அதிகம் தயாரிக்கின்றன.
Primark நிறுவனத்தை நிர்வகிக்கும் Sparrow Group, வழக்கமாகப் பங்களாதேஷிலிருந்து லண்டனுக்குத் துபாய் வழி ஆடைகளை வரவழைக்கும்.
துபாய் விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் Sparrow Groupஇன் சரக்குகள் பங்களாதேஷ் விமான நிலையத்திலேயே கிடக்கின்றன.
சரக்குகளை வேறு வழியில் தருவிக்கமுடியுமா என்பதை அது பரிசீலிக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
