செய்திகள் வணிகம்
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்களால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், அரசு RON95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு RM1.99 என தொடர்ந்து நிலைநிறுத்துமென அறிவித்துள்ளது.
உள்நாட்டு எரிசக்தி விலை தொடர்பான கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய தேவையில்லை என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் தெரிவித்துள்ளார்.
“உலக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், RON95 இன் உள்நாட்டு விலை பாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி கூறியுள்ளார்.
“ஆகையால், பொருளாதார அமைச்சு நடப்பினை முறையாகக் கண்காணிக்கிறது. இருப்பினும், அது அரசு கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய உத்தேசம் ஏதுமில்லை.
“எமது நோக்கம் தற்போதைய நிலையைத் தொடர்வதாகும்,” என்று அவர் இன்று நடந்த 3-ஆம் ஆண்டு OGSE100 CEO மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இருப்பினும், பிரதமரின் உறுதியை நடைமுறைப்படுத்தும் முறைமை இன்னும் விரிவாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவில், இலக்கு மானியங்களை நாங்கள் செயல்படுத்தி மக்களுக்கு நியாயமான விலைகளைப் பராமரிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் தேசிய பெட்ரோல் உதவித் தொகைச் செலவுக்கு விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
