செய்திகள் வணிகம்
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்களால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், அரசு RON95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு RM1.99 என தொடர்ந்து நிலைநிறுத்துமென அறிவித்துள்ளது.
உள்நாட்டு எரிசக்தி விலை தொடர்பான கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய தேவையில்லை என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் தெரிவித்துள்ளார்.
“உலக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், RON95 இன் உள்நாட்டு விலை பாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி கூறியுள்ளார்.
“ஆகையால், பொருளாதார அமைச்சு நடப்பினை முறையாகக் கண்காணிக்கிறது. இருப்பினும், அது அரசு கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய உத்தேசம் ஏதுமில்லை.
“எமது நோக்கம் தற்போதைய நிலையைத் தொடர்வதாகும்,” என்று அவர் இன்று நடந்த 3-ஆம் ஆண்டு OGSE100 CEO மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இருப்பினும், பிரதமரின் உறுதியை நடைமுறைப்படுத்தும் முறைமை இன்னும் விரிவாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவில், இலக்கு மானியங்களை நாங்கள் செயல்படுத்தி மக்களுக்கு நியாயமான விலைகளைப் பராமரிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் தேசிய பெட்ரோல் உதவித் தொகைச் செலவுக்கு விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
