செய்திகள் மலேசியா
ஷாரா கைரினா மரண விசாரணை: நீதிமன்றத்திற்கு பொம்மையுடன் வந்த பிரதிவாதி வழக்கறிஞர்கள்
கோத்தா கினபாலு:
ஷாரா கைரினா மரண விசாரணை முன்னிட்டு பொம்மையுடன் பிரதிவாதி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களின் வழக்கறிஞர் டத்தோ ராம் சிங், அவரது வழக்கறிஞர்கள் குழுவினருடன் சேர்ந்து, இன்று இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்திற்கு ஒரு பொம்மையை கொண்டு வந்தார்.
இது இன்று காலை முதல் அங்கு இருந்த ஊடக பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்தது.
மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையின் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.
இந்த நடவடிக்கைகளின் போது, அவரது உடலில் உள்ள நிலை, காயங்களைக் காண்பிப்பதில் குயின் எலிசபெத் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியுவுக்கு உதவுவதற்காக இந்த சிலை கொண்டு வரப்பட்டது.
மேலும் இன்று டாக்டர் ஜெஸ்ஸி, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் செயல்பாட்டு அதிகாரியின் கேள்விகளுக்கும், இறந்தவரின் பெற்றோர் உட்பட ஆர்வமுள்ள தரப்பினரின் கேள்விகளுக்கும் அந்தந்த வழக்கறிஞர்கள் மூலம் பதிலளிப்பதன் மூலம் தனது அறிக்கையைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2026, 2:24 pm
வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை
January 17, 2026, 2:21 pm
நிபோங் திபாலில் மிக அருகில் இருந்து சுட்டதால் ஆடவர் மரணம்
January 17, 2026, 11:08 am
ஜாஹித் ஹமிதியின் ‘ரூமா பங்சா’ யோசனைக்கு அம்னோ வரவேற்பு
January 17, 2026, 11:01 am
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்
January 17, 2026, 10:57 am
மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜாஹித்
January 17, 2026, 10:51 am
தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்
January 16, 2026, 11:24 pm
