செய்திகள் வணிகம்
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
கோலாலம்பூர்:
3 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி, மாலை 4.45 மணியளவில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 87 ரூபாய் 87 காசு.
ஒருமலேசிய ரிங்கிட் 20 ரூபாய் 75 காசைத் தருகிறது.
இந்தியப் பங்குச் சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது.
இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காட்டு வரி இன்று நடப்புக்கு வந்தது.
ரூபாயின் மதிப்பு சரிவதற்கு அமெரிக்க வரி காரணம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 190 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. இந்திய ரூபாயின் வீழ்ச்சியினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
சபாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை: பனைத் தொழிலில் புதிய பொருளாதாரப் புரட்சி
May 11, 2026, 5:05 pm
