செய்திகள் வணிகம்
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் அரசியல், இராணுவ பதற்றம் காரணமாக செம்பனை எண்ணெயின் விலை கடந்த வாரத்திலிருந்து சுமார் 10 சதவீதம் உயர்ந்து, ஒரு டன்னுக்கு 4,592 ரிங்கிட் என அதிகரித்துள்ளது.
முதலீட்டு வங்கி வெளியிட்ட ஆய்வு குறிப்பில், இந்த பதற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை எனவும், தற்போதைய விலை உயர்வு குறுகிய காலத்தில் தோட்ட நிறுவனங்களின் வருமானத்தை ஆதரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உற்பத்தி நிலைய நிறுவனங்கள் செம்பனை எண்ணெயின் விலை உயர்வால் அதிக நன்மை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய பதற்றம் நீண்ட காலம் நீடித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் சீர்குலைக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான செம்பனை எண்ணையின் சராசரி விலை ஒரு டன்னுக்கு 4,200 ரிங்கிட் என்ற கணிப்பை முதலீட்டு வங்கி தற்போது மாற்றாமல் வைத்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
