செய்திகள் வணிகம்
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் அரசியல், இராணுவ பதற்றம் காரணமாக செம்பனை எண்ணெயின் விலை கடந்த வாரத்திலிருந்து சுமார் 10 சதவீதம் உயர்ந்து, ஒரு டன்னுக்கு 4,592 ரிங்கிட் என அதிகரித்துள்ளது.
முதலீட்டு வங்கி வெளியிட்ட ஆய்வு குறிப்பில், இந்த பதற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை எனவும், தற்போதைய விலை உயர்வு குறுகிய காலத்தில் தோட்ட நிறுவனங்களின் வருமானத்தை ஆதரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உற்பத்தி நிலைய நிறுவனங்கள் செம்பனை எண்ணெயின் விலை உயர்வால் அதிக நன்மை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய பதற்றம் நீண்ட காலம் நீடித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் சீர்குலைக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான செம்பனை எண்ணையின் சராசரி விலை ஒரு டன்னுக்கு 4,200 ரிங்கிட் என்ற கணிப்பை முதலீட்டு வங்கி தற்போது மாற்றாமல் வைத்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 10:15 am
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
March 3, 2026, 4:42 pm
