செய்திகள் வணிகம்
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் அரசியல், இராணுவ பதற்றம் காரணமாக செம்பனை எண்ணெயின் விலை கடந்த வாரத்திலிருந்து சுமார் 10 சதவீதம் உயர்ந்து, ஒரு டன்னுக்கு 4,592 ரிங்கிட் என அதிகரித்துள்ளது.
முதலீட்டு வங்கி வெளியிட்ட ஆய்வு குறிப்பில், இந்த பதற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை எனவும், தற்போதைய விலை உயர்வு குறுகிய காலத்தில் தோட்ட நிறுவனங்களின் வருமானத்தை ஆதரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உற்பத்தி நிலைய நிறுவனங்கள் செம்பனை எண்ணெயின் விலை உயர்வால் அதிக நன்மை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய பதற்றம் நீண்ட காலம் நீடித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் சீர்குலைக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான செம்பனை எண்ணையின் சராசரி விலை ஒரு டன்னுக்கு 4,200 ரிங்கிட் என்ற கணிப்பை முதலீட்டு வங்கி தற்போது மாற்றாமல் வைத்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
