
செய்திகள் வணிகம்
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
குவைத்:
குவைத்தில் முதன் முறையாக உள்ளூர்வாழைப்பழங்கள் சந்தைக்கு வருகின்றன. குவைத் குடிமகனான விவசாயி ஈத் சாரி அல்-அஸ்மியின் பண்ணை தோட்டத்தில் வாழை நடவு செய்யப்பட்டு வாழைப்பழங்கள் வர்த்தக நோக்கத்திற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. பல வருடங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்ட பல சோதனைகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு அவர் இந்த முன்னோடியில்லாத விவசாயத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.
நாட்டின் சந்தையில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தலை அவர் ஒழுங்கமைத்துள்ளார். காய்கறி சந்தைக்குச் செல்லாமல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரும் நேரடியாக வந்து வாங்கி செல்லும் வகையில் விற்பனை மையங்களை நிறுவ இடங்களைக் கண்டறிய அவர் தற்போது பணியாற்றி வருகிறார். தற்போது, ஒரு நாளைக்கு 300 பெட்டி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அடுத்த அக்டோபர் முதல் உற்பத்தியை 500 பெட்டிகளாக அதிகரிக்கும் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் வெளிப்படுத்தினார்.
நாட்டில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வதையும், நியாயமான விலையில் புதிய உள்ளூர் பொருட்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை இதுவாகும். விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள் வீட்டிலேயே வாழைப்பழங்களை வளர்க்க உதவும் வகையில் வாழை நாற்றுகளை விநியோகிக்கும் திட்டத்தையும் அவர் திட்டமிட்டுள்ளார்.
வாழைப்பழங்கள் வளரும் பருவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மே வரை நீடிக்கும். நடவு செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு பழங்கள் அறுவடை செய்யத் தொடங்கும் என்றும் அவர் விளக்கினார்.
இதை தவிர மற்ற பலவிதமான பழவகைகளையும் சோதனை முறையில் வளர்த்து அதிலும் வெற்றி கண்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm