நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி, நிக் நஸ்மி ராஜினாமா செய்தாலும் அரசு வலுவாக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

ரபிசி, நிக் நஸ்மி அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தாலும் அரசு  இன்னும் வலுவாக உள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ரபிசி ரம்லி,  நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தனர்.

அவர்கள் ராஜினாமா செய்தாலும் மடானி அரசாங்கம் வலுவாக உள்ளது.

இன்று அரசாங்கத்தை அமைக்கும் அனைத்து கூறு கட்சிகளிடமிருந்தும் அரசாங்கம் இன்னும் உறுதியான ஆதரவை பெற்றுள்ளது.

இந்தக் கட்சிகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பும் பரஸ்பர மரியாதை உணர்வும் நாட்டின் நிர்வாகத்தின் தொடர்ச்சிக்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கும் அடிப்படையாகும் என்று அவர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

ரபிசி,  நிக் நஸ்மி ஆகியோரின் ராஜினாமாக்கள் அவர்களது கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுளாகும்.

அரசாங்கம் அவர்களின் முடிவுகளை மதிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset