நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட்டை திரும்பப் பெறுவதை எஸ்ஆர்சி  நோக்கமாக கொண்டுள்ளது

கோலாலம்பூர்:

நஜிப் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட்டை திரும்பப் பெறுவதை எஸ்ஆர்சி நோக்கமாக கொண்டுள்ளது.

எஸ்ஆர்சி அனைத்துலக நிறுவனமும் கன்டிங்கான் மெந்தாரி நிறுவனமும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு  மக்களின் உரிமையான 42 மில்லியன் ரிங்கிட்டை மீட்பதை நோக்கமாகக் கொண்டதாக இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் வழக்கறிஞர் குவான் வில் சென் தனது தொடக்க அறிக்கையில்,

தங்கள் வழக்கு பொது நம்பிக்கை துரோகம், தேசிய நோக்கம், மக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இதில் உண்மைகள் மிகவும் தெளிவாக உள்ளன.

மலேசியாவின் ஆற்றலின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், பொது சேவை ஓய்வு பெற்றவர்களுக்கு பயனளிக்கவும் வேண்டிய 42 மில்லியன் ரிம்கிட் பொதுப் பணம், பிரதிவாதியான முன்னாள் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தபட்டது.

ஆதாரங்கள் எளிமையான ஆனால் பேரழிவு தரும் கதையைச் சொல்கின்றன.

பொது அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset