
செய்திகள் மலேசியா
31.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளை எம்ஏசிசி பறிமுதல் செய்துள்ளது: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசி 31.4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 பில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
சொத்துக்கள், பணம், சொகுசு வாகனங்கள், கடிகாரங்கள், பிரத்தியேக கைப்பைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களின் விளைவாக கடத்தல் கும்பல்கள், நிதி மோசடி, ஆடம்பர சொத்துக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்ஏசிசி வெற்றிகரமாக 31.4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக இரும்பு கடத்தல் கும்பல் மீதான சோதனையைத் தொடர்ந்து 183 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 217 சொகுசு கடிகாரங்கள், 27 கைப்பைகள் சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீயின் வீட்டில் இருந்து 32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு சொத்துக்களுக்கு கூடுதலாக, ஃபைபர் நெட்வொர்க் திட்டத்தில் 620 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து சொத்துக்கள் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 5:03 pm
எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்: ரபிசி
August 15, 2025, 3:23 pm
சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு விமான நிலையத்தில் தரையிறங்கிய AirAsia விமானம்
August 15, 2025, 2:44 pm