
செய்திகள் மலேசியா
ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்: பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை விடுத்தார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகனுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுவொரு தீங்கிழைக்கும், துரோக செயலாகும்.
ஆக இது குறித்து வெளிப்படையான, விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளிகளில் நடக்கும் பகடிவதை பிரச்சினையிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை.
அதற்குள் இப்போது மற்றொரு வருந்தத்தக்க சம்பவம் நடந்துள்ளது என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ரபிசி, அவரது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 5:25 pm
மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 14, 2025, 5:23 pm
மாணவி சர்வினா பள்ளியில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் எம்ஏசிசியில் புகார்
August 14, 2025, 4:19 pm
ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.
August 14, 2025, 4:09 pm
வழக்கறிஞர் ம.மதியழகனின் "வழக்குகளில் என் பயணம்": நூல் வெளியீடு
August 14, 2025, 1:21 pm
ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: சைபுடின் அப்துல்லா
August 14, 2025, 1:18 pm