
செய்திகள் மலேசியா
ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
ஷாரா மரண வழக்கில் விசாரணை அதிகாரி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
ஷாரா கைரினா மகாதீரின் மரண வழக்கின் விசாரணை அதிகாரி, மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரவில்லை.
இதன் மூலம் அவர் சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
13 வயதான ஷாராவின் மரணம் சந்தேகத்திற்குரியது. மேலும் பிரேத பரிசோதனை தேவை.
ஷாராவின் தாயார் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற உறுதி மொழியில் கையெழுத்திட்டாலும்,
விசாரணை அதிகாரி அதைச் செயல்படுத்த விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நிறுவப்பட்ட விசாரணை நடைமுறைகளைப் பின்பற்றாததற்காக விசாரணை அதிகாரி, அவரது மேற்பார்வையாளர் புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
குறிப்பாக அவர்கள் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 5:25 pm
மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 14, 2025, 5:23 pm
மாணவி சர்வினா பள்ளியில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் எம்ஏசிசியில் புகார்
August 14, 2025, 4:19 pm
ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.
August 14, 2025, 4:09 pm
வழக்கறிஞர் ம.மதியழகனின் "வழக்குகளில் என் பயணம்": நூல் வெளியீடு
August 14, 2025, 1:21 pm
ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: சைபுடின் அப்துல்லா
August 14, 2025, 1:18 pm