
செய்திகள் மலேசியா
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசி வாயிலாக பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பேச்சுவார்த்தையில் தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் விவகாரத்தில் மலேசியாவின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
மேலும் அமெரிக்காவின் வரி கொள்கை மலேசியாவுக்கு சுமையாக இருக்காது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
குறிப்பாக அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் உறுதி அளித்துள்ளார்.
மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm