செய்திகள் மலேசியா
மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்: தியாகேஸ்
ஈப்போ:
மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் துளசி போலிஸ் புகார் செய்ய பேரா மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.
பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஸ் கணேசன் கூறினார்.
மஇகாவுக்கும் அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணக்கும் எதிராக பேசியதால் பல மிரட்டல்கள் வந்தன.
குறிப்பாக மன்னிப்பு கேட்க சொல்லி இந்த மிரட்டல்கள் வந்தன என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.
துளசி கூறியது உண்மை என்றால் குறிப்பாக அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர் தாராளமாக போலிஸ் புகார் செய்யலாம்.
அதற்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு துணையாக இருக்கும்.
ஆனால் உண்மை இல்லையென்றால் அவர் உடனடியாக மலிவான மலிவான விளம்பரத்தை நிறுத்துக் கொள்ள வேண்டும் என்று தியாகேஸ் வலியுறுத்தினார்.
பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவு, ஒற்றுமை அரசாங்கத்துடனான சட்டமன்ற உறுப்பினர் துளசியின் ஒற்றுமை உணர்வை ஒருபோதும் விமர்சித்ததில்லை.
ஆனால் மஇகாவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 5:17 pm
பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி
December 5, 2025, 8:56 am
புங் மொக்தார் காலமானார்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
