நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு மேஜையில் அமர்ந்து பேசுங்கள்: சட்டமன்ற உறுப்பினருக்கு பகாங் சுல்தான் அறிவுறுத்து

குவாந்தான்:

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மேஜையில் அமர்ந்து பேச வேண்டும்.

பகாங் சுல்தான்  அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இதனை அறிவுறுத்தினார்.

மாநில பிரதிநிதிகள் எப்போதும் அரசியல் விஷயங்களில் அதிக மும்முரமாக இருக்க வேண்டாம்.

அவர்களைத் தேர்ந்தெடுத்த பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்க வெளியே செல்வதில் அதிக விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் எப்போதும் அந்தந்தப் பகுதிகளில் தொடர்ந்து இருந்து புகார்களைக் கேட்கவும், சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், குறிப்பாக கஷ்டங்களை எதிர்கொள்பவர்களைக் கேட்கவும் வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு பிரதிநிதியும் எப்போதும் தங்கள் பகுதியில் இருப்பதை நான் விரும்புகிறேன்.

அல்-சுல்தான் அப்துல்லா தனது 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இஸ்தானா அப்துல்அஜிஸில் சிறப்பு நேர்காணலின் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset