நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருத்துறைப்பூண்டி பைனான்​சி​யர் வீட்டில் கொள்ளை முயற்சி; மலேசியாவை சேர்ந்த 4 பேர் கைது: ஒருவர் தலைமறைவு

திருவாரூர்: ​

திருத்​துறைப்​பூண்டி பைனான்​சி​யர் வீட்​டில் நேற்று முன்​தினம் முகமூடி அணிந்து கொள்ளை முயற்​சி​யில் ஈடு​பட்ட மலேசி​யா​வைச் சேர்ந்த 4 பேரை போலிசார் கைது செய்​தனர். மேலும் ஒரு​வரைத் தேடி வரு​கின்​றனர்.

திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்டி காவல் நிலை​யம் அரு​கில் வசிப்​பவர் கார்த்​திக்.

நேற்று முன்​தினம் இரவு இவரது வீட்​டின் ஓர் அறை​யில் கார்த்​தி​யும், மற்​றொரு அறை​யில் அவரது மனை​வி, 2 மகள்களும் தூங்கிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, வீட்​டுக்​குள் புகுந்த முகமூடி கொள்​ளை​யர்​கள் 3 பேர், கார்த்​தி​யின் மனை​வி, மகள்​களிடம் கத்​தி​யைக் காண்​பித்​து, நகைகளை கழற்றித் தரு​மாறு மிரட்​டி​யுள்​ளனர்.

மனை​வி, மகள்​களின் கூச்​சலைக் கேட்டு எழுந்​துச் சென்ற கார்த்​தியை 3 பேரும் கத்​தி​யால் தாக்​கி​யுள்​ளனர்.

கார்த்​தி​யும் பதி​லுக்கு அவர்​களை தாக்​கியுள்ளார். இதனிடையே, சப்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் ஓடி வந்​த​போது, வாயி​லில் காத்​திருந்த மேலும் 2 கொள்​ளை​யர்​கள் தப்​பியோடி​விட்​டனர்.

பின்​னர், வீட்​டில் இருந்த 3 பேரை​யும் பிடித்​து, திருத்​துறைப்​பூண்டி போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். விசா​ரணை​யில், அவர்​கள் மலேசி​யா​வைச் சேர்ந்த சரவணன் ​(44), இளவரசன்​(26), கோபி(30) என்​பது தெரிய​வந்​தது. இதை யடுத்து 3 பேரை​யும் போலிசா​ர் கைது செய்​தனர்.
 
இதுகுறித்து போலிசா​ர் கூறிய​தாவது:

கார்த்தி வீட்​டில் ஏற்​கெனவே தோட்ட வேலை பார்த்​து, பின்​னர் மலேசி​யா​வுக்கு வேலைக்குச் சென்​றவர் குமார் என்​கிற குமரன்​ (40).

இவருக்கு மலேசிய குடி​யுரிமை பெற்ற சரவணன், இளவரசன், கோபி, விமலன்​(19) ஆகியோ​ருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.

 இந்​நிலை​யில், பைனான்​சி​யர் கார்த்தி வீட்​டில் கொள்ளை அடிப்​ப​தற்​காக மலேசியாவில் இருந்து ஜூலை 13ஆம் தேதி தன்​னுடன் 4 பேரை​யும் குமரன் அழைத்து வந்து திருச்​சி​யில் தங்க வைத்​துள்​ளார்.

பின்​னர், ஜூலை 26ஆம் தேதி திருத்​துறைப்​பூண்​டிக்கு அழைத்து வந்​து, நண்​பர் வீட்​டில் தங்க வைத்​து, கார்த்​தி​யின் வீட்டை நோட்​ட​மிட்டுள்ளனர்.

 இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கார்த்தி வீட்​டுக்​குச் சென்ற 5 பேரில், குமரன், விமலன் ஆகியோர் வீட்​டுக்கு வெளியே காவலுக்கு நிற்க, மற்ற 3 பேரும் வீட்​டுக்​குள் சென்​றுள்​ளனர்.

ஆனால், கொள்ளை முயற்சி தோல்​வியடைந்​த​தால் 3 பேரும் சிக்​கிக் கொண்​டனர்.

தப்​பியோடிய குமரன், விமலன் ஆகியோரைத் தேடி வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார் கூறினர். இதற்​கிடை​யில், விமலனை திருச்​சி​யில் போலிசார் கைது செய்​துள்​ள​தாகக் கூறப்​படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset