நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்த வேண்டாம்: மொஹைதின்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த துருன் அன்வர் பேரணியில் பங்கேற்ற பலரை, தேச நிந்தனை சட்டம் 1948 உட்பட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் போலிசார் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

போலிசார் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த முறை மட்டுமல்ல, எதிர்காலத்தில், இதுபோன்ற கொடூரமான செயல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தனிநபருக்கு மட்டுமல்ல, நமது நாட்டின் சட்ட அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்க முடியும்.

தேச நிந்தனை  சட்டம் போன்ற அடக்குமுறையாகக் கருதப்படும் சட்டங்களை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அவர் கடுமையாக சாடினார்.

தற்போதைய நிகழ்வுகள் நடந்தபோது, எனக்கு அது அடக்குமுறையாக மட்டுமல்லாமல், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்திய ஒரு செயலாகும்.

ஆளும் கட்சி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதி பயன்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமருமான அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset