நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கென்யாவில் பெரும் இடப்பெயர்வு திட்டத்திற்கான நேஷனல் ஜியாக்ராபிக் ஆய்வாளராக மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் தேர்வு

கோலாலம்பூர்:

கென்யாவின் மசாய் மாரா தேசிய காப்பகத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கான நேஷனல் ஜியாக்ராபிக் ஆய்வாளராக மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஷ் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அவர் தான்சானியாவின் செரெங்கேட்டியிலிருந்து மசாய் மாராவின் பசுமையான புல்வெளிகளுக்கு உலகின் மிகப்பெரிய வருடாந்திர நிலப்பரப்பு வனவிலங்குகளின் அற்புதமான பெரிய இடப் பெயர்வை ஆவணப்படுத்துவார்.

காட்டெருமை, வரிக்குதிரைகள்,  கேசல்கள் ஆகியவை இந்த வனவிலங்குகளில் அடங்கும்.

பெரும் இடப்பெயர்வை ஆவணப்படுத்த நேஷனல் ஜியாக்ராபிக் சங்கத்திற்கு அவர் சமர்ப்பித்த கருத்துருவாக்கம் ஏப்ரல் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மசாய் மாராவில் களப்பணியைத் தொடங்க உள்ளார்.

இது உச்ச இடப்பெயர்வு காலத்துடன் ஒத்துப்போகிறது.

மசாய் மாரா என்பது பெரும் இடம் பெயர்வின் மையமாகும். 

இது வெறும் படப்பிடிப்புக் காட்சி மட்டுமல்ல, இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான சமநிலையின் சின்னமாகும் என்று 32 வயதான தினேஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset