
செய்திகள் மலேசியா
இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள்; அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தீர்க்கப்படுகின்றன: செனட்டர் சரஸ்வதி
கோலாலம்பூர்:
இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தீர்க்கப்படுகின்றன.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.
இந்திய சமூகப் பிரச்சினை ஓரங்கட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை துணையமைச்சர் சரஸ்வதி ஆதரித்துப் பேசியுள்ளார்.
இந்திய சமூகத்தைப் பாதிக்கும் கவலைகள் உண்மையில் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தீர்க்கப்படுகின்றன.
மேலும் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான கருத்துக்களை மறுக்கும் ஒரு உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார்.
இது உண்மைக்குப் புறம்பானது. இந்திய சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மஇகாவுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேவ்ஃப் கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு,
அத்துடன் எம்ஐஇடி உதவித்தொகைகளுக்கான நிதியுதவி ஆகியவை இந்திய மாணவர்கள் உயர் கல்வியை சிறப்பாக அணுகுவதை உறுதி செய்வதாக அவர் வலியுறுத்தினார்.
சுதந்திரத்திற்கு முன்னர் மலேசியாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரிடையே நாடற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்துறை அமைச்சின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைப்பது, அடையாள அட்டை வழங்குவது உட்பட நீடித்த குடியுரிமை பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 10:26 pm
கேபளால் கழுத்தை நெரித்ததால் தேவக்ஷேன் மரணமடைத்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
July 29, 2025, 10:24 pm
சமய வளர்ச்சியுடன் சமுக சேவையையும் ஆற்றிட வேண்டும்: சுந்தரசேகர் வலியுறுத்து
July 29, 2025, 4:48 pm