
செய்திகள் மலேசியா
அன்வார் எதிர்ப்பு பேரணி: செகுபார்ட் கைது
கோலாலம்பூர்:
அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பில் செகுபார்ட் என்று அழைக்கப்படும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பட்ருல் ஹிஷாம் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை அவரது வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத் உறுதிப்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமை தலைநகரில் அன்வார் எதிர்ப்பு பேரணை நடத்தப்பட்டது.
இப்பேரணி தொடர்பில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செகுபார்ட் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
மேலும் செகுபார்ட், விசாரணை அதிகாரி இடையே நாளை காலை 11 மணிக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டதால், தடுப்புக்காவல் தேவையில்லை.
புக்கிட் அமானில் ஆஜராவதாக செகுபார்ட் உறுதிமொழி அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்