நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் பார்த்திபன் இதனை கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் கோலாலம்பூரில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்குகிறது.

இவ்வாலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அவ்வகையில் இன்று ஆலயத்தில் ஆடிப்புரத் திருவிழா நடைபெற்றது.

காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து  தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்திற்கு பின் பூஜைகள் நடத்தப்பட்டது. சரியாக 1 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று ஆடி மாதம் முடிவடையும் வரை ஆலயத்தில் பூஜைகள், விழாக்கள் நடைபெறவுள்ளது.

இவ்விழாக்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் பக்தர்கள் உபயம் அன்னதானம் வழங்கலாம் என்று பார்த்திபன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset