நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பாக நான்கு போலீஸ் புகார்கள் கிடைக்கப்பெற்றன 

கோலாலம்பூர்: 

கடந்த சனிக்கிழமை எதிர்கட்சி தரப்பால் மேற்கொள்ளப்பட்ட அன்வார் எதிர்ப்பு பேரணி தொடர்பாக நான்கு போலீஸ் புகார்கள் கிடைக்கப்பெற்றதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் முஹம்மத் உசுஃப் ஜான் கூறினார். 

பேரணியின் போது ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக மேலும் மூன்று போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்பட்டன. 
அன்வார் உருவகம் கொண்ட பொம்மையை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 504, 1998ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது 

ட்ரோன்கள் பறக்கவிடும்  நடவடிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக CAAM தரப்புக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

பேரணி அமைதியாக நடைபெற்றாலும் கலந்து கொண்டவர்கள் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தினார்களா என்பதை போலீஸ் விசாரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset