
செய்திகள் மலேசியா
நீதித்துறையின் தலைமை நீதிபதி பதவி நியமனம்: மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கோலாலம்பூர்:
நீதித்துறையின் புதிய தலைமை நீதிபதியாக டத்தோ வான் அஹ்மத் ஃபரிட் வான் சலே தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி பிரமாணம் நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் சிறப்பாக நடைபெற்றது.
நீதித்துறையின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு வைபவத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இரு துணைப் பிரதமர்களான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி, டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், சட்டம், கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே நிகழ்ச்சியில் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டத்தோ அபு பாக்கார் ஜய்ஸ், சபா, சரவாக் தலைமை நீதிபதி டத்தோ அஸிஸா நவாவி ஆகியோருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் விதி 1இன் 122B பிரிவின் கீழ் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm