நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை 

பழவேற்காடு:

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு அடுத்த  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதள மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்திலிருந்து வரும் 30-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி எஃப் 16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட மீன் வளம், மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset