நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணி நடத்தும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை மதிக்கிறது; டத்தாரான் மெர்டேக்காவில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குங்கள் 

கோலாலம்பூர்: 

நாட்டு மக்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை பெரிதும் மதிக்கிறது. 

பேரணி நடத்துவது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகும். அதோடு ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது என்று அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் இஸ்மாயில் கூறினார். 

நாளை சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் அன்வார் எதிர்ப்பு பேரணியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். 

பேரணியில் ஈடுபடும் பொதுமக்கள் தங்களின் பயணங்களை முறையாக திட்டமிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

நாளை ஜூலை 26ஆம் தேதி எதிர்கட்சிகள் இணைந்து பிரதமர் அன்வாருக்கு எதிராக அன்வார் எதிர்ப்பு பேரணியை தலைநகரில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset