நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான அழுத்தம் கொடுத்தால் இன்னும் அதிகமானோர் அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்: பிஎஸ்எம்

கோலாலம்பூர்:

அதிகமான அழுத்தம் கொடுத்தால் இன்னும் அதிகமானோர் அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்

பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் இதனை கூறினார்.

இந்த சனிக்கிழமை அன்வார் எதிர்ப்பி பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சி பலனை தராது.

போராட்டத்தில் இணைய விரும்பும் அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் எச்சரிக்கை கடுமையானது.

இது துன் டாக்டர் மகாதிர் முகமது நிர்வாகத்தின் போது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை போல் உள்ளது.

பங்கேற்பாளர்களை அடக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் அவர்களின் நோக்கத்திற்கான ஆதரவை அதிகரிக்கும் என்பதை வரலாறு காட்டுகிறது.

முந்தைய சீர்திருத்த இயக்கம், பெர்சே பேரணிகளில் இதற்கு உதாரணமாக உள்ளது.

எச்சரிக்கைகள், எப்ஆர்யூ, தண்ணீர் பீரங்கித் தாக்குதல்கள், கைதுகள் ஆகியவை துன் மகாதீர் காலத்தில் அதிகம் பார்த்து விட்டோம்.

இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset