நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலில் தேமு, அம்னோ தனித்து போட்டியிடாது; ஆனால் எதிர்காலம் தெரியவில்லை: ஜாஹித் ஹமிடி

கோலாலம்பூர்:

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேமு, அம்னோ தனித்து போட்டியிடாது.

ஆனால் எதிர்காலம் தெரியவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

நாட்டின் அரசியல்  நிலைத் தன்மைக்காக ஒற்றுமை  அரசாங்கத்துடன் கட்சி தொடர்ந்து ஒத்துழைக்கும்.

அம்னோ, தேசிய முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் என்று சில அழுத்தங்களும் குரல்களும் எழுந்துள்ளன.

இருந்தாலும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதே கட்சியின் முடிவு என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ஒத்துழைப்பு தொடரும் என்றாலும், தேர்தலின் போது தராசு சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்துவதே தனது கட்சியின் நிலைப்பாடு என்று ஜாஹிட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset