நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதிக் குறைந்தவர்களுக்கான 100 ரிங்கிட்டை  குறைத்து மதிப்பிட வேண்டாம்; அரசியலாக்காதீர்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

பட்டர்வொர்த்:

வசதிக் குறைந்த மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் 100 ரிங்கிட்டை  குறைத்து மதிப்பிட வேண்டாம்.

குறிப்பாக அரசியலாக்க வேண்டாம் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவ துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அடிப்படை ரஹ்மா பங்களிப்பு திட்டத்தின் மூலம் 18 வயது, அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு 100 கூடுதல் ரொக்க உதவி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகையை யாரும். அரசியலாக்கக்கூடாது

மாறாக இது ஏழைகளுக்கான அக்கறையின் ஒரு வடிவமாகக் கருத வேண்டும்.

100 ரிங்கிட் உதவியின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவது இந்த நாட்டில் உள்ள ஏழைகளை சிறுமைப்படுத்துவது போன்றது,

ஏனெனில் அது ஏழைகளின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டி20 குழுவைச் சேர்ந்த ஒரு பணக்காரராக இருந்தால், அவர் உண்மையில் 100 ரிங்கிட்டை இழிவாகப் பார்ப்பார்

ஆனால் இந்த நாட்டில் எத்தனை பேர் பி40 குழுவில் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது.

அவர்களுக்கு 100 ரிங்கிட் என்பது ஒரு பெரிய விஷயமா இல்லையா என்பது அவருக்குப் புரியாது.

அவர்களுக்கு 100 ரிங்கிட்டுக்கு/எத்தனை கிலோ அரிசி வாங்க முடியும், எத்தனை கோழிகளை வாங்க முடியும் என்பது தெரியுமா.

எனவே அரசாங்கத்தின் முயற்சி நல்லதாக இருந்தால், அது நல்லது என்று நாம் சொல்ல வேண்டும்.

அது நல்லதல்ல என்றால், அது நல்லதல்ல என்று நாம் சொல்ல வேண்டும்.

ஆனால் எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

பட்டர்வொர்த்தில் நடைபெற்ற பெண் 2.0 சிறப்பு நிதி நிதி விளக்கவுரை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு டத்தோஸ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset