நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பூத்தே விவகாரத்தில் தான் குற்றவாளி என்றால் வயதைக் காரணம் காட்டாமல் வழக்கு தொடரலாம்: துன் மகாதீர் 

கோலாலம்பூர்:

பூலாவ் பத்து பூத்தே விவகாரத்தில் வயது காரணமாக தனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறிய கூற்றுக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் மறுப்பு தெரிவித்துள்ளார். 

வயதைக் காரணம் காட்டாமல் தாம் குற்றவாளி எனக் கருதினால், நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.

பிரதமர் அன்வாரின் இந்நடவடிக்கையை மகாதீர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், பத்து பூத்தே விவகாரத்தில் தாம் குற்றவாளி என்று கருதப்பட்டாலும், தன்னுடைய வயது காரணம உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறுவதைத் தன்னால் ஏற்க முடியாது என்றார் மகாதீர்.

தான் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பினும் பிரதமர் அன்வார் தம் மீது நாடாளுமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தாம் குற்றவாளி என்பதை நிரூப்பிக்க வேண்டும் என்று மகாதீர் கேட்டுக் கொண்டார்.

நான் குற்றவாளி அல்ல என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனைச் சட்ட ரீதியாக நிரூபிக்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று நிரூப்பிக்கப்படும் அச்சம் உள்ளவர்களுக்குதான் வயது விலக்கு காரணம் தேவையும் என்று மகாதீர் தனது பதிவில் கூறியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset