நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்

கிள்ளான்:

கிள்ளான் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தை தொடர்ந்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று மாலை கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது

இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக நோயாளிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் எந்தவித உயிரிழப்புகளோ அல்லது கடுமையான சேதமோ ஏற்படவில்லை.

சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சிவப்பு மண்டல வார்டில் ஒரு சாக்கெட் சுவிட்சில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset