
செய்திகள் மலேசியா
சாலை விரிவாக்கத்திற்காக கடைகளை இடிப்பதில் பாரபட்சம் காட்டப்படவில்லை: கோலாலம்பூர் மேயர்
கோலாலம்பூர்:
சாலை விரிவாக்கத்திற்காக டேசா பண்டானில் உள்ள ஒன்பது வணிகக் கடைகளை இடிக்கும் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறப்படுவதை கோலாலம்பூர் மேயர் Datuk Seri Maimunah Mohd Sharif மறுத்துள்ளார்.
சாலை மிகவும் குறுகலாகவும், நெரிசலாகவும் இருப்பதாக குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்தச் சாலை விரிவாகத் திட்டம் 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று அவர் விளக்கமளித்தார்.
கோலாலம்பூர் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் மேயர் இவ்வாறு கூறினார்.
தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளைக் கோலாலம்பூர் மாநகர மன்றம் மதிப்பாய்வு செய்ததாகவும், பின்னர் நடைபாதைகள் உள்ளிட்ட புதிய சாலை வடிவமைப்புகளை முன்மொழிந்ததாகவும் மேயர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மாநகர மன்றம் குடியிருப்பாளர்களுடன் நான்கு முறை சந்திப்பு நடத்தியதாகவும், கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து திட்டத்தைத் திருத்தியதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm