
செய்திகள் மலேசியா
அடையாள ஆவணங்கள் இல்லாத 8575 மாணவர்கள் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் பயில்கின்றனர்: ஃபட்லினா சிடேக்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 8575 மாணவர்கள் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாமல் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வருவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
மார்ச் 11, 2009 தேதியிட்ட கல்வி அமைச்சின் சுற்றறிக்கை எண் 1/2009: ஆவணங்கள் இல்லாத மலேசிய குடிமக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுமதித்தல் என்ற சுற்றறிக்கையின் கீழ் இந்தக் குழந்தைகளின் சேர்க்கை அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சுற்றறிக்கை அடையாள ஆவணங்கள் இல்லாத குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க அனுமதி வழங்குகிறது.
பெற்றோரில் ஒருவர் கட்டாயம் மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர அனுமதி வழங்கப்படுவதாக என்று அவர் கூறினார்.
மாற்றுக் கற்றல் மையங்கள் உட்பட ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும்அகதிகள் அல்லது நாடற்ற குழந்தைகள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்து கண்டறிய விரும்பிய சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் கேள்விக்கு ஃபட்லினா நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm