நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழைய உலோகப் பொருள் கடத்தல் கும்பல் சோதனையில் 332.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன: எம்ஏசிசி

புத்ராஜெயா:

பழைய உலோகப் பொருள் கடத்தல் கும்பல் சோதனையில் இதுவரை 332.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை உறுதிப்படுத்தினார்.

பழைய உலோகக் கடத்தல் கும்பல்  தொடர்பில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி ஐந்து மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனைகளில் 165 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலங்கள், 1.9 மில்லியன் மதிப்புள்ள கார்கள், 15.5 மில்லியன் மதிப்புள்ள வீடுகள், 740,000 ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு கார்கள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 149.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு 332.5 மில்லியன் ரிங்கிட்டாகும்.

மேலும்  நிறுவன இயக்குநர்கள், இரண்டு அமலாக்க முகவர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், கணக்கு மேலாளர்கள்,  ஃபார்வர்டிங் முகவர்கள் உட்பட 27 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எம்ஏசிசி சட்டப் பிரிவுகள், தேசிய வருமான வாரிய சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் துரிதமான நடந்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset