
செய்திகள் மலேசியா
டிரம்புடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தேசியக் கொள்கையை மலேசியா தொடர்ந்து பாதுகாக்கும்: பிரதமர்
புத்ராஜெயா:
டிரம்புடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தேசியக் கொள்கையை மலேசியா தொடர்ந்து பாதுகாக்கும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ர்ராஹிம் இதனை கூறினார்.
அமெரிக்காவுடன் வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதில் பூமிபுத்ரா கொள்கை உட்பட நாட்டின் நிலைப்பாட்டை பாதுகாப்பதில் மலேசியா சமரசம் செய்யாது.
பொருளாதார சக்தியுடனான வர்த்தகம், முதலீட்டு உறவுகளின் முக்கியத்துவத்தை நாங்கள் பாராட்டிய போதிலும்,
பேச்சுவார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு பிரச்சினையில் அரசாங்கம் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்கிறது.
மேலும் இது குறித்து அமைச்சரவை பல முறை விவாதித்துள்ளது. ஆனால் எங்களுக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது. எங்களுக்கு ஒரு எல்லைக் கோடு உள்ளது.
தேசியக் கொள்கையில் தலையிட வேண்டாம் என்பதே அந்த எல்லைக் கோடாகும்.
ஆக இதனால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm