
செய்திகள் மலேசியா
ஓம்புட்ஸ்மன் சட்டத்திற்கு புத்துயிர்: எம்ஏசிசி மன்னிப்புக்குப் பிறகு வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) காவலில் உயிரிழந்த அரசியல் உதவியாளர் டீயோ பிம் ஹொக்கின் குடும்பத்திடம், தான் ஸ்ரீ அசாம் பாக்கி மன்னிப்பு கேட்டதையடுத்து, ஓம்புட்ஸ்மன் சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன.
(ஓம்புட்ஸ்மன் என்பது பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துறை/அமைப்புகளுக்கு இடையிலான புகார்களை விசாரிக்க நியமிக்கப்படும் ஒரு சுயாதீன மற்றும் நபர் சாராத பொது கண்காணிப்பு அதிகாரி (independent public oversight officer) ஆகும்.)
பொதுத்துறை மீது நம்பிக்கையை மீட்டெடுக்க, வெளிப்படையான மற்றும் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் அவசியம் என நற்பணியாளர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
தற்போதைய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 5 கண்காணிப்பு அமைப்புகள், ஆலோசனை மட்டுமே வழங்கக்கூடியவை, விசாரணை அல்லது அமல்படுத்தும் அதிகாரம் இல்லாதவையாக இருப்பது கவலைக்குரியது என ஊழல் மற்றும் குடும்பநிலை ஆதிக்கத்தை எதிர்க்கும் அமைப்பின் இயக்குநர் புஷ்பன் முருகையா தெரிவித்தார்.
இதனிடையே, டீயோவின் குடும்பம் எம்ஏசிசி வெளியிட்ட மன்னிப்பை கவனித்தாலும், அதை முழுமையாக ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இது, எம்ஏசிசி-யின் செயற்பாடுகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில், நீண்ட காலமாக காத்திருக்கும் ஓம்புட்ஸ்மன் சட்டத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இது அதிகார மீறலை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான தனிநிலை கண்காணிப்பு நிறுவனம் ஆக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm
சட்டவிரோதமாக இயங்கிய பேருந்து: முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
July 18, 2025, 3:19 pm
சரவாக் பள்ளத்தாக்கில் காணாமல்போன மரம் வெட்டுபவர் சடலமாக மீட்பு
July 18, 2025, 3:13 pm
6 மாத குழந்தை உயிரிழப்பு: குழந்தை பராமரிப்பாளருக்கு தடுப்பு காவல்
July 18, 2025, 3:02 pm