நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா அம்னோ எதிர்காலத்தை நோக்கி பயணிக்கின்றது:  புங்க் மொக்தார்

கோட்டா கினபாலு, ஜூலை 18:
2022ம் ஆண்டு நடந்த அரசியல் சம்பவங்களை மீண்டும் பேசுவதை தவிர்த்து, எதிர்காலத்தை நோக்கி செயல்பட அம்னோ தயாராக உள்ளது என்று சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங்க் மொக்தார் கூறினார்.

முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் தக்லான் அளித்த கருத்துகளுக்கு பதிலளித்த அவர், “அவர் சொல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அந்த முடிவுகள் தனிப்பட்டவை அல்ல; சபா அம்னோவின் கூட்டு தீர்மானம்தான்,” என்றார்.

“நாம் கடந்ததை மதிக்கிறோம். ஆனால் அதில் சிக்கிக் கொள்வதில்லை. சபா அம்னோ இப்போது ஒருமித்தமான அணியாகத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்பது தீர்வுகள், பழைய பிரச்சனைகள் அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக அப்துல் ரஹ்மான் தக்லான், 2022-ஆம் ஆண்டில் சபா அம்னோவில் நடந்த உள்கட்சி முரண்பாடுகள் மற்றும் தலைமை முடிவுகள் குறித்து பேசி, கடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset