நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் அன்னாசிப்பழங்களுக்கு நியூசிலாந்தில் அதிக வரவேற்பு: ஜாஹித் ஹமிடி

கோலாலம்பூர்:

உள்ளூர் அன்னாசிப்பழங்களுக்கு நியூசிலாந்தில் அதிக வரவேற்பு கிடைப்பதால் அந்நாட்டு அரசு அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாம், அன்னாசி பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களும் நியூசிலாந்து மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.

இதனால் சர்வதேச சந்தைக்கு அன்னாசி பழங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

இருப்பினும், நாட்டின் தற்போதைய அன்னாசி ஏற்றுமதி திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை ஜாஹித் ஒப்புக் கொண்டார். 

அன்னாசி பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜாஹித் கேட்டுக் கொண்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset