
செய்திகள் மலேசியா
15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் மரணம்: 13 பேர் காயமடைந்தனர்
லஹாட் டத்து:
15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் மரணமடைந்த வேளையில் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இங்குள்ள லாடாங் பெர்மாய் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
கிட்டத்தட்ட 15 பேர் பயணித்த பிக்கப் வாகனம் 15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் கல்மா (33) என்பவர் மரணமடைந்தார். மேலும் பல காயமடைந்தனர்.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
ஏழு வயது ஆண்கள், ஏழு வயது பெண்கள், ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 15 பேர் வாகனத்தில் இருந்தனர்.
லஹாத் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த உதவி இயக்குநர் சும்சோவா ரஷீத் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm